இன்று 600 ஐ தொடும் தொற்று, அதிகம் தொற்றுக்குள்ளானோர் 18 வயதிற்கு குறைந்தவர்கள்

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 10 மணியாகும் போது 600 ஐ அண்மித்துள்ளது. இன்று இரவு 10 மணியுடன் நிறைவடைந்த 14 மணி நேரத்தில் 61 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த எண்ணிக்கை 584 ஆக உயர்ந்தது. இன்னும் நள்ளிரவு நேரத்தில் மேலும் பல பரிசோதனை முடிவுகள் வெளிவர இருந்த நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600 ஐ எட்டலாம் என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன. இன்று அடையாளம் காணப்பட்டிருந்த தொற்றாளர்களில் பலர் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரண தெரிவித்தார். இந் நிலையில் இன்று மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியிஉல் பதிவான தொற்றாளர்களில் 180 பேர் வெலிசறை கடற்படை முகாமின் கடற்படை வீரர்களாவர் என கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும் முப்படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் கொமாண்டர் சவேந்திர சில்வா கூறினார். ‘ இதுவரை வெலிசறை கடற்படை முகாமுடன் தொடர்புப...