Posts

20வது திருத்தத்துக்கு எதிராக, முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது

Image
20வது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லவுல்லதாக கட்சியின் தலைவர் ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் உத்தேச திருத்தத்தில் பல தவறுகள் உள்ளன என தெரிவித்துள்ளார். உத்தேச திருத்தத்தினை மேலும் பலர் எதிர்க்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து கருத்துக்கள் வெளியாகியுள்ள போதிலும் தற்போதைய அரசாங்கம் அதற்கான உறுதியான கால எல்லையை அல்லது யோசனைகளை முன்வைக்கவில்லை என ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை குறைத்து ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு 20வது திருத்தம் முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார் நாட்டுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அவசியம் ஆனால் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை பாதுகாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/36b8Y7q via Kalasam

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் முஸ்லிம் பெண்கள் அபாயா அணிய தடை - ஆலிமா பட்டதாரி ஒருவர் ராஜினாமா

Image
புல்மோட்டை கனியமணல் கூட்டுத் தாபனத்தில் வேலைக்கு சென்ற ஹாலிசா என்ற முஸ்லிம் பெண்ணை அபாயா ஆடை அணிந்து வேலைக்கு வரக்கூடாது என்றும் சாரி அணிந்து தான் வேலைக்கு வரவேண்டும் என்றும் நிர்பந்திக்கப்பட்டதை அடுத்து அவர் தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார். ஹாலிஸா என்ற குறித்த பெண் ஓர் ஆலிமாவும் பட்டதாரியுமாவார் அவர் கடந்த 6 ஆண்டுகளாக கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்து வருகிறார். அங்கு 9 முஸ்லிம் பெண்கள் கடமையாற்றுகின்றார்கள். இவர்கள் இருவர் சாரி அணிந்தே வேலைக்கு செல்வதை வழமையாக கொண்டுள்ளார்கள். ஏனைய 07 பேரும் அபாயா அணிந்து வேலைக்கு சென்ற நிலையில் புதிய அரசு பதவிக்கு வந்த பின்னர் நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் அவர்கள் அனைவரும் சாரி அணிந்தே வேலைக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஹாலிஸா தான் ஓர் ஆலிமா என்பதால் சாரி அணிந்து வேலைக்கு செல்வதற்கு மறுத்துள்ளார். அபாயா அணிந்து வேலைக்கு சென்ற ஹாலிஸா தவிர்ந்த மீதி 6 பெண்களும் தமது வேலை பரிபோகும் என்பதினால் கடந்த ஜனவரி மாதம் முதல் சாரி அணிந்தே வேலைக்கு செல்கின்றனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஹாலிஸா “நான் சாரி அணி...

மருதானையில் போலி சான்றிதழ்களை விநியோகிக்கும் கச்சேரி சுற்றிவளைப்பு

Image
மருதானை – மாளிகாகந்த பகுதியில் போலி சான்றிதழ்களை விநியோகிக்கும் கச்சேரி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வசமிருந்த 227 போலி இறப்பர் முத்திரைகள், 42 போலி கடிதத் தலைப்புகள், 300 வௌிநாட்டுக் கடவுச்சீட்டுகள், 9 தேசிய அடையாள அட்டைகள், மடிக்கணினி, ஸ்கேனர், பிரின்டர் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊழல் விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/30d2cKt via Kalasam

மாலைதீவுடன் இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சர் டக்ளஸ் முயற்சி

Image
கடற்றொழில்சார் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பான விடயங்களில் மாலைதீவுடன் தொழில்நுட்ப, அறிவுசார் அனுபங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எல்லை தாண்டுகின்ற சந்தர்ப்பங்களில் மாலைதீவில் கைது செய்யப்படுகின்ற இலங்கை கடற்றொழிலாளர் விவகாரத்தை இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றின் ஊடாகக் கையாள வேண்டும் எனவும் தெரிவித்தார். மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் ஓமர் அப்துல் ரசாக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று (26) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடும் போதே அமைச்சரினால் குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. குறித்த சந்திப்பின் போது மாலைதீவின் கடலுணவு மற்றும் கடலுணவுசார் உற்பத்திகளுக்கு இலங்கையில் சிறந்த வரவேற்பு காணப்படுகின்ற நிலையில், கொவிட் 19 காரணமாக அண்மைக் காலமாக குறித்த இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கவலை வெளியிட்ட மாலைதீவு தூதுவர், குறித்த தடையினை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தார். மேலும், அண்மைக்காலமாக இலங்கையில் கடற்றொழில் செயற்பாடுகள், மீன்பிடி ...

கொழும்பில் சைக்கிள் லேன் அறிமுகப்படுத்த திட்டம்

Image
கொழும்பு துறைமுக நகர நுழைவாயில் முதல் பத்தரமுல்ல தியத்த உயன வரை பிரத்யேக சைக்கிள் லேன் அறிமுகப்படுத்தும் திட்டம் பற்றி தகவல் வெளியிட்டுள்ளது நகர அபிவிருத்தி சபை. கொரோனா சூழ்நிலையில் உலகின் முக்கிய நகரங்களில் துவிச்சக்கர வண்டி பாவனைக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையிலும் பிரத்யேக ஒழுங்கை உருவாக்குவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. 1.5 முதல் 2.5 மீற்றர் அகலமான ஒழுங்கை திட்டமிடப்பட்டுள்ளதுடன் 2021 இறுதியளவில் பிரத்யேக சைக்கிள் லேன் பாவனைக்கு வரும் என மேல் மாகாண நகர அபிவிருத்தி பணிப்பாளர் ஏ. குணதிலக்க விளக்கமளித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/307FsM4 via Kalasam

வசீம் தாஜுதீன் வழக்கு முடித்து வைக்கப்பட்டது!

Image
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் உயிரோடில்லாத நிலையில் அவ்வழக்கை மேலும் தொடர முடியாது என தீர்ப்பளித்து வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது நீதிமன்றம். குறித்த வழக்கின் முக்கிய சாட்சியங்களை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபரான பேராசிரியர் ஆனந்த சமரசேகர உயிரோடு இல்லாதமையைக் காரணங் காட்டியே இவ்வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் வசீம் தாஜுதீனின் உடலம் பரபரப்பாக மீளத் தோண்டியெடுக்கப்பட்டு மரணத்துக்கான காரணம் விபத்தில்லை, கொலையென அறிவிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்ன இவ்வழக்கு விசாரணையை முடிவுக்குக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2Ez1JKY via Kalasam

The wire cutter

Image
As both a devotee of doohickeys and a homeowner with a family, I’ve daydreamed about installing a high-flying security system, with a full roster of bells and whistles, only to balk when it came time to commit. And so Amazon’s recent release of Alexa Guard piqued my interest. With Alexa Guard enabled, any Echo speaker becomes a sentinel, able to employ the same sensitive microphones it uses for hearing your voice requests to detect the siren of a smoke detector or carbon monoxide detector, or the sound of glass breaking, and then send a notification to your smartphone. Besides being a nifty addition to Alexa’s already extensive bag of tricks, Guard sounds like a lightweight but clever alternative to a traditional home security system that for many people just might check all the right boxes. So we decided to test Alexa Guard. Being reluctant to invite hardened criminals into my home for beta testing, I instead conscripted a pair of feisty kids, brimming with post-school energy, to ...