Posts

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது குறித்து தனக்குத் தெரியாது – பசில் ராஜபக்ஷ

Image
இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எவ்வாறாயினும் சீனத் தூதரகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை அமைச்சருக்குத் தெரியுமா என வினவியபோது, ​​அவ்வாறானதொரு நிகழ்வு குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கடனுதவி மற்றும் இரு தரப்பினருக்கு இடையிலான ஒப்பந்தங்களின்படி பணம் செலுத்தத் தவறியதற்காக இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தால் இலங்கை மக்கள் வங்கி நேற்று (29) கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த முடிவு சீனாவின் வர்த்தக அமைச்சகத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3bqq4PW via Kalasam

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் விவசாயிகளையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் – சஜித் பிரேமதாச

Image
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அமையவுள்ள அரசாங்கம் விவசாயிகளையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டு வரவுள்ள சட்டமூலம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் சாசன வடிவில் இருக்கும். நாங்கள் ஒரு உழவர் சாசனத்தை அறிமுகப்படுத்துவோம், அதன் கீழ் நாங்கள் சட்டத்தை கொண்டு வருவோம், அதன் கீழ் விவசாயிகள் தங்கள் விருப்பப்படி உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கான உரிமைகள் உறுதி செய்யப்படும். அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பட்டியலில் விவசாயிகளின் உரிமைகளையும் நாங்கள் உள்ளடக்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3vWHltw via Kalasam

பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி

Image
எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக க.பொ.தர சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார். மேலும் நவம்பர் 1ஆம் திகதி புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, 50 வீதமான மாணவர்களை உள்ளடக்கி பிரத்தியேக வகுப்புகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2ZAGIdz via Kalasam

கடும் மழையால், பயிர்ச்செய்கைகள் அழிவடைந்து விட்டதாக நுவரெலியா விவசாயிகள் கவலை.

Image
நாட்டில் இரசாயன உரத் தட்டுப்பாடு , கிருமிநாசினி தட்டுப்பாடுகளால் விவசாயிகள் பெரும் இக்கட்டான நிலையில் விவசாயத்தை மேற்கொண்டு வருகையில், நுவரெலியா , பொரலாந்த , கந்தபளை போன்ற பகுதிகளில் பெய்த கடும் மழையால் அதிகமான பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3msvznJ via Kalasam

சிவப்பு பட்டியலிலுள்ள நாடுகளின் பெயரை நீக்கியது இங்கிலாந்து

Image
கொரோனா பரவல் அச்சத்தால் கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், ஹைதி, பனாமா, பெரு மற்றும் வெனிசுலா உள்ளிட்ட 7 நாடுகளையும் இங்கிலாந்து அரசு சிவப்பு பட்டியலில் வைத்திருந்தது. அந்த நாடுகளுக்கு பயணம் செய்யவும், தொழில் மற்றும் வர்த்தக ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்காக அந்த நாடுகளின் பெயர்களை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 1ம் திகதி முதல் சிவப்பு பட்டியலில் இருக்கும் 7 நாடுகளின் பெயர்களும் நீக்கப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3jP5CwR via Kalasam

ஜனாதிபதி ஐக்கிய இராச்சியம் நோக்கி பயணமானார்

Image
ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை ஜனாதிபதி தலைமையிலான குழு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3mtur34 via Kalasam

The wire cutter

Image
The best media streaming device connects you with the video and audio content you want in the fastest, most helpful way. We’ve recommended Roku devices since 2012, but now Roku’s reign has come to an end. The Google Chromecast with Google TV is our new favorite thanks to a redesigned interface that better reflects how people watch video in 2021, and it feels completely modern compared with the competition. Dismiss from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2OptRSa via the wire cutter