ஹஜ்ஜுல் அக்பர் சஹ்ரானின் இரண்டாவது குழுவின் தலைவர் : குற்றத்தடுப்புப் பிரிவு
மாவனல்ல முறுத்தவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை ஜமேத்துல் இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவரான ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியிருப்பதாக உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது என உத்தியோகபூர்வ அரச இணையத்தளம் (news.lk) செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஷிமுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்துள்ள இவர் சஹ்ரானின் இரண்டாவது குழுவின் தலைவர் என கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை ஜமாத்துல் இஸ்லாம் அமைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கோட்பாட்டு ரீதியில் ஊக்குவிப்பு வழங்கியிருப்பதாகவும் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/30HUzKl
via Kalasam

Comments
Post a Comment