பர்தா அணிந்து பரீட்சை எழுத எந்தத் தடையும் இல்லை : பரீட்சைகள் ஆணையாளர்

பர்தா அணிந்து பரீட்சை எழுத எந்தத் தடையும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்ததாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குப் பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் மாணவிகளைப் பரீட்சை எழுத அனுமதி வழங்காமல் இடையூறு செய்யப்பட்டமை தொடர்பில், பரீட்சைகள் ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டுவந்தபோதே பரீட்சைகள் ஆணையாளர் இதனைத் தெரிவித்ததாக முஜீபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்களைப் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வழங்குவதாக ஆணையாளர் தன்னிடம் உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த உயர் தரப்பரீட்சை நேற்று நாடுபூராகவும் ஆரம்பமானது. இந்த நிலையில் பாடசாலை சீருடையில் (வெள்ளை நிற பர்தா) அணிந்து பரீட்சை எழுதச் சென்ற சில மாணவிகளுக்குப் பர்தாவை அகற்றிவிட்டு பரீட்சை எழுதுமாறு பணிக்கப்பட்டதாக சில பகுதிகளிலிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

குறிப்பாக பூகொடை குமாரிமுல்ல மாணவிகள் சிலர் பரீட்சை எழுதத் தயாரான நிலையில், பர்தாக்களை அகற்றுமாறு பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி கடுமையாக உத்தரவிட்டதால் அந்த மாணவிகள் பர்தா இன்றி பரீட்சைக்குத் தோற்றினர். பின்னர் பெற்றோரினால் அவர்களுக்கு முக்காடுகள் வழங்கப்பட்டதாகவும் அறிய வருகிறது. கிரிந்திவெல மத்திய கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளுக்கே, இந்நிலை ஏற்பட்டது. இது தொடர்பில் பாடசாலை அதிபர் எம்.கே.ஆர்.மொஹமட் வலயக் கல்விப் பணிமனையிலும் கம்பஹா கல்விப் பணிப்பாளரிடமும் முறையிட்டுள்ளார்.

இதே போன்று வெலிமடையில் பரீட்சை எழுதிய மாணவிகளும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக அறிவிக்கப்படுகிறது. வெலிமடை தமிழ் வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றச் சென்ற மாணவிகளே இவ்வாறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாகப் பெற்றோர் கூறியுள்ளனர்.

மேலும் சில பிரதேசங்களிலும் பர்தா அணிந்து பரீட்சை எழுத இடையூறு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2YIMPG0
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

தனது பதவியை இராஜினாமா செய்த ஹசன் அலி..!