ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக நாங்கள் இருப்போம் - ரிஷாட் பதியுதீன்.


வரப்போகின்ற ஆட்சியை தீர்மானிக்கின்ற ஒரு சக்தியாக தங்கள் கட்சி திகழும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் குறிப்பிட்டார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இந்த கருத்தினை குறிப்பிட்டார்.

தங்கள் கட்சி சஜித் தலைமையிலான பாரிய கூட்டணியுடன் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சின்னம் தொடர்பான சிறு சிக்கல் இருப்பதாகவும் யானையா அன்னமா என்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

மனோ கனேசன் , திகாம்பரம் , ரவுப் ஹக்கீம் ஆகியோர் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் இணைந்து பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைக்க பேசி எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2SVFROn
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter