கொரோனா பரிசோதனை நோன்பை முறிக்குமா? ACJU விளக்கம்.
கொரோனா பரிசோதனை செய்வது நோன்பை முறிக்காது என விளக்கமளித்துள்ளது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா.
சாதாரண கொரோனா பரிசோதனை மூலம் மூக்கு மற்றும் வாயூடாக எதுவும் உட்செல்வதில்லையெனவும் மூக்கின் அல்லது தொண்டையின் உட்பகுதியின் ஆரம்பத்திலேயே இப்பரிசோதனை நடாத்தப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது தவிரவும், சொட்டு மருந்து ஏதும் உட்செலுத்தப்படுமாக இருந்தால் நோன்பு முறியும் எனவும் குறித்த நோன்பு கழா செய்யப்பட வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3daKxaz
via Kalasam

Comments
Post a Comment