எழுமாறாக மேற்கொண்ட சோதனையில் மாவடிப்பள்ளியில் மூவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர் !!

 



மாளிகைக்காடு நிருபர்


இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மாவடிப்பள்ளியில் மேற்கொண்ட 57 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் மூன்று பேர்  கொவிட் 19 தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது. மேலும் 08 பீ.சி.ஆர். மாதிரிகளும் இன்று எடுக்கப்பட்டுள்ளன என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு தடுப்பு பிரிவினர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் மற்றும் கொரோனோ ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தலைமையிலான சம்மாந்துறை பொலிஸார், பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு  அண்டிஜென் பரிசோதனையின் போதே இந்த பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.


வீதியில் உலாவித்திரிந்தோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோர், சுகாதார நடைமுறைகளைப் பேனாதோர், என பலருக்கும் மேற்கொண்ட இந்த பரிசோதனையில் மூன்று நபர்கள் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்கள். அவருக்கு தொற்றுள்ளதை உறுதிப்படுத்தியதை அடுத்து தொற்றாளரின் குடும்பத்தினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் குடும்பத்தினர்கள் எவருக்கும் தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் மேலும் தெரிவித்தார்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3i3jfIO
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?