பாண் ஒன்றின் விலை அடுத்த வாரம் முதல் 10 ரூபாவால் அதிகரிக்கும்



சி.எல்.சிசில்

அடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.




ஒரு கிலோ மாவின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.




எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக, பாண் தவிர ஏனைய வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை ரூபா 5 முதல் ரூபா 10 வரை அதிகரிக்க வேண்டியிருந்தது என அவர் மேலும் கூறினார்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3qCH4th
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?