“சக்குராய்” விமானங்கள் பறக்க தடை







“சக்குராய்” விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து விமான சேவைகளும் உடன் அமுலுக்குவரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான தீர்மானம் சிவில் விமான சேவைகள் அதிகார சபையால் எடுக்கப்பட்டுள்ளது.

மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை, இந்த நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது என, விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி. ஷானக தெரிவிக்கின்றார்.

இந்த விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டாவது இலகுரக விமானமும் இன்று (27) விபத்துக்குள்ளான நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த விமான நிறுவனத்திற்கு சொந்தமான இலகுரக விமானமொன்று கடந்த 22 ஆம் திகதி பயாகல கடற்கரையோரத்திலும் இன்றையதினம் நீர்கொழும்பு பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3JiiOp4
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?