ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் முடியாது போனால், ஜனாதிபதி ஒருவரை எதிர்காலத்தில் உருவாக்கியேனும் ஒரே ''நாடு- ஒரே சட்டத்தை நிறைவேற்றுவோம்.



ஒரே நாடு, ஒரே சட்டத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் முடியாது போகுமாயின் ஜனாதிபதி ஒருவரை எதிர்காலத்தில் உருவாக்கியேனும் அச்சட்டத்தை நிறைவேற்றப்போவதாக,
‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர்
தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டின் முன்னாள் தலைவர்கள் எவரும் ‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ தொடர்பில் இதற்கு முன்னர் சிந்தித்ததும் கிடையாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின் எதிர்காலத்துக்காக சில நல்ல விடயங்களை செய்து வருகிறார் என்றார்.


ஜனாதிபதியின் இவ்வாறான திட்டங்கள் மக்களுக்கு தெரியுமா என்பதில் பிரச்சினைகள் உள்ளன.

எவ்வாறாயினும் நாட்டு மக்களிடத்தில் தற்போது பட்டிணி, சமையல் எரிவாயு மற்றும் உரம் உள்ளிட்ட பிரச்சினைகளே காணப்படுகின்றன என்றார்.

ஒரே நாடு- ஒரே சட்டம்’ எனும் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் முடியாவிட்டாலும் எதிர்காலத்தில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்கியேனும் ஒரே நாடு, ஒரே சட்டத்தை சட்டமாக்குவோம் என்றார்.


மேலும், ‘ஒரே நாடு, ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை ஜனாதிபதி கோட்டா ய ராஜபக்ஷவுக்கு உள்ளது.

எனவே இதனை ஜனாதிபதியால் வெற்றிகொள்ள முடியும். அதற்கான அதிகாரம்ஜனாதிபதியிடம் இருக்கிறது.


எனவே, இதனை ஜனாதிபதி செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது
என்றார்.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3qvWKyO
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?