இன்று நாட்டை வந்தடைய இருந்த 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல் தாமதமாகியுள்ளது ; எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு


40,000 மெட்ரிக் டன் பெற்றோல் எரிபொருள் நாட்டுக்கு

 வருவதற்கு ஒரு நாள் தாமதமாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார்.


எரிபொருள் இன்று அதிகாலை வரவிருந்ததாகவும், ஆனால் தாமதமாகி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.



இதனால் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் விநியோகிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், டீசல் கிடைக்கப்பெற்றதாகவும், நாடளாவிய ரீதியில் முழு கொள்ளளவிற்கு விநியோகிக்கப் படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட சுப்பர் டீசல் விநியோகமே காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/D1cYdAi
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

தனது பதவியை இராஜினாமா செய்த ஹசன் அலி..!