நாமலுக்கு மேலுமொரு புதிய பதவி!
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகளின்படி, ஒரு மாதத்திற்குள் குறுகிய கால முன்மொழிவுகள், மத்திய காலப் பிரேரணைகளை இரண்டு மாதங்களுக்குள்ளும் நீண்ட காலப் பிரேரணைகளை மூன்று மாதங்களுக்குள்ளும் தேசிய பேரவையில் சமர்ப்பிக்க உபகுழு உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/LOaXVw2
via Kalasam

Comments
Post a Comment