குறைக்கப்பட்டது எரிபொருட்களின் விலை!




எரிபொருட்களின் விலையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.


அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.


இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.


ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 340 ரூபாயாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 333 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.


அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.


95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 375 ரூபாயாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 365 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.


அதேபோல், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.


ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாயாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 310 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.


மேலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.


சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 465 ரூபாயாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 330 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/h3YMZnp
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?