🔴இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

 

QR குறியீட்டு முறைமைக்கு அமைய, வாகனங்களுக்காக, ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கம், இன்று நள்ளிரவு முதல், அதிகரிக்கப்படவுள்ளது.


தற்போது, மோட்டார் சைக்கிளுக்கு 7 லீற்றரும், முச்சக்கர வண்டிகளுக்கு 8 லீற்றரும் எரிபொருள் வழங்கப்படுகிறது.


அந்த எரிபொருள் ஒதுக்கம், 14 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளது.


பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்படுகின்ற 15 லீற்றர் எரிபொருள் ஒதுக்கம், 22 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளது.


பேருந்துகளுக்காக, வழங்கப்பட்டு வருகின்ற 60 லீற்றர் எரிபொருள் ஒதுக்கம், 125 லீற்றராகவும் அதிகரிக்கப்படவுள்ளது.


லொறிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற 75 லீற்றர் எரிபொருள் ஒதுக்கம், 125 லீற்றராகவும், கார்கள் மற்றும் வேன்களுக்காக வழங்கப்படுகின்ற 30 லீற்றர் எரிபொருள் ஒதுக்கம், 40 லீற்றராகவும், விசேட தேவை வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம், 45 லீற்றராகவும் அதிகரிக்கப்பட உள்ளது.


ஏனைய வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம், 25 லீற்றரில் இருந்து 45 லீற்றராகவும் அதிகரிக்கப்படவுள்ளது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Osji8m2
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!