அதிபரை தாக்கிய காதர் மஸ்தானின் இணைப்பாளர்!


கண்ணியமாக மதிக்க வேண்டிய பாடசாலையின் அதிபர் மீது தாக்குதல் நடாத்தி அடாவடி செய்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் இணைப்பாளர் கைது செய்யபடாமல் அதிகார துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றதா என வன்னி மாவட்ட கல்விச்சமூகம் கேள்வியெழுப்பியுள்ளது.

31/07/ 2024 புதன்கிழமை காலை 9 மணி அளவில் மண்/பண்டாரவெளி முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலைக்குள் புகுந்து காதர் மஸ்தான் ராஜாங்க அமைச்சரின் முசலி இணைப்பாளர் முகமது தன்சீம் கடமை யிலிருந்த பாடசாலை அதிபரை , ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இவ் அடாவடித்தனம் தொடர்பில் சிலாபத்துறை காவல் நிலையம் மற்றும் வலய கல்வி பணிமனையில் முறைப்பாடு செய்த போதும் இதுவரை எந்தவித கைது நடவடிக்கையும் நடைபெறவில்லை. அரசியல் சித்துவிளையாட்டு காப்பாற்றுகின்றது என குறித்த அதிபர் கவலையடைந்துள்ளார்.

இச் செயல்பாட்டால் முசலி பிரதேச அதிபர்களும் ஆசிரியர்களும் பெரும் அச்சத்தில் உள்ளதுடன்,


குறித்த நபர் வலய கல்விப் பணிப்பாளர் உதவியுடன் ஆசிரியர் அதிபர் இடமாற்றம் போன்ற பழிவாங்கல்களை தொடர்ந்து செய்து வருவது கண்டிக்கத்தக்க விடயம் எனவு கல்விச்சமூகம் தெரிவிக்கின்றது.

from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/FXgkST6
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

தனது பதவியை இராஜினாமா செய்த ஹசன் அலி..!