சோதனைகள் கண்டு துவண்டு விடாதே..!


சோதனைகள் இறைவன் எம்மீது கொண்ட பாசத்தின் வெளிப்பாடன்றி வேறில்லை..!

இறைவன் நம்மை சோதிக்கும் ஒவ்வொரு முறையும் அந்த சோதனைகளை முறையாக கையாண்டு வெற்றி காண முயற்சி செய்..!

ஒவ்வொரு சோதனைக்குப் பின்னும் சந்தோஷங்கள் நமக்காகவே காத்திருக்கின்றன..!

சோதனைகளின் போது ஒரு நம்பிக்கை ,  நம் அனைவரது உள்ளத்திலும் எம்மை அறியாமலேயே குடிகொண்டு விடும்..!

அது ,படைத்த இறைவன் நிச்சயமாக எம்மை கைவிட மாட்டான்...!

இறைவன் நம்மை சோதிக்கும் போது ஏன் எனக்கு மாத்திரம் இப்படி இருக்கிறது? 

வாழ்வில் ஒவ்வொரு நிமிடங்களுமே  சோதனையாக கழிகிறதே என்று பிறரிடம் கூறி புலம்பித் திரியாதே..! 

இறைவன் நம்மை மாத்திரமல்ல, அத்தனை மனிதர்களையும் சோதித்துக் கொண்டு தான் இருக்கிறான்... 

வெவ்வேறு வழிகளில் ‌ நாம் வாழும் வாழ்க்கை கூட நமக்கு சோதனையாகத் தான் இருக்கிறது. 

இந்த வாழ்வில் நாம் சிறப்பாக நன்மைகளை செய்து, தீமைகளை புறக்கணித்தால்  மறுமை வாழ்வு சிறக்கும் ...

சோதனைகளை பொறுமையாக எதிர் கொள்வோம்.

இன்ஷா அல்லாஹ்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/mq2UNud
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

தனது பதவியை இராஜினாமா செய்த ஹசன் அலி..!