ஜனாதிபதி சம்மந்தமாக பேஸ்புக்கில் போலியான புகைப்படத்தை பகிர்ந்தவருக்கு எதிராக விசாரணை ஆரம்பம்..!
போதைப்பொருள் கடத்தல்காரர் 'மாகந்துரே மதுஷ்' என்பவரின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டதாகக் கூறும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டதாக அரசாங்க தகவல் துறை பதில் பொலிஸ் மா அதிபருக்கு (ஐ.ஜி.பி) கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரங்க லக்மால் என்ற நபரால் இந்தப் புகைப்படம் பேஸ்புக்கில் பரப்பப்பட்டதாக அரசாங்க தகவல் துறை பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
அந்த நபர் தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளதால் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று அரசாங்க தகவல் துறை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3dwZHGK
via Kalasam
Comments
Post a Comment