நாளை ரவூப் ஹக்கீமுடன் உத்தியோகபூர்வமாக இணைகின்றார் முஷாரப் !
அகில இலங்கை மக்கள் காங்கிரசின், முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் தற்போது பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான SMM. முஷர்ரப் அவர்களும் அவர்களுடைய பொத்துவில் பிரதேச சபையின் எழு (07) உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய முக்கியஸ்தர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் நாளை இணைவதாக அக்கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளர் சமால்டீன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்க முஸ்லீம் காங்கிரஸின் தேசியத் தலைவர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் ( MP) அவர்களின் முன்னிலையில் நாளை (25) காலை 9.30 மணியளவில் மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைத்துள்ள வாவா திருமண மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும் என அவர் அறிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர்கள், முன்னால் பாராளமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் அத்தோடு.அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தேர்தலில் போட்டியிட்ட , பட்டியல் வேட்பாளர்கள்,மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/LMlduQW
via Kalasam
Comments
Post a Comment