Posts

ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் - பொலிஸ்மா அதிபர்.

Image
பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லை என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகினர். எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் என பொலிஸார் உறுதியளித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பொலிஸ்மா அதிபர் நேற்றையதினம் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற அனைத்து தகவல்களையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸார் கையளித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் நிமல் கருணாசிறி தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/zLuoRwI via Kalasam

மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணாவிடின் நாமும் காலி முகத்திடலுக்கு செல்ல நேரிடும் - ரணில் விக்ரமசிங்க

Image
(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்) மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நடப்பு அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அனைத்து அரசியல் கட்சிகளும் பாரம்பரிய சம்பிரதாய அரசியல் கொள்கையில் இருந்து விடுபட வேண்டும். மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணாவிடின் நாமும் காலி முகத்திடலுக்கு சென்று உணவு உட்கொள்ள நேரிடும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (22) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிக்கும் போது முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பில் வினவப்பட்டது. ஆம் நான் ஹிஜாப் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். முஸ்லிம் பெண்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொள்ளவில்லை. இவ்விடயம் குறித்து மேலதிகமாக கதைக்க விரும்பவில்லை. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் முக்கிய விடயங்களை ஆரம்பத்தில் தெரிந்து கொண்டோம். பலி கொடுக்கும் வகையில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது முறையற்றது. கு...

“செவிடன் காதில் ஊதிய சங்கு போலன்றி, கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து!

Image
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பு திருத்த பிரேரணைக்கு பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து பிரதிநிதிகளும் வாக்களிப்பதன் மூலமே, இந்த நாட்டை மீண்டும் சுபீட்சம் அடையச் செய்ய முடியும் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று காலை (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “ஜனாதிபதி ஆவதற்கு முன்னரே கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர் என நாங்கள் பல தடவை கூறி இருக்கிறோம். கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா, நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் ஒருமுறை கருத்து தெரிவிக்கையில், “பைத்தியக்காரன் ஒருவன் நாட்டின் ஜனாதிபதியாகி, அவரிடம் இவ்வளவு அதிகாரங்களும் ஒப்படைக்கப்படுமானால், இந்த நாடு குட்டிச்சுவராகி, நாசமடைந்துவிடும்” என்றார். இன்று நான் அவ்வாறு சொல்லவில்லை, வீதிகளிலும் காலி முகத்திடலிலும் பல நாட்களாக ஆர்ப்பாட்டம் செய்து வருபவர்கள் கோட்டாவுக்கு எதிராக கோஷமிடுவதுடன், “கோட்டா கோ ஹோம்” எனக் கூறுகின்றனர். இவர்களில் புத்திஜீவிக...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

Image
12.5 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 5,175 இனால் இன்று (22) நள்ளிரவு முதல் அதிகரிக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Zlug9xY via Kalasam

“சுடச் சொன்னது யார் என்று இன்னும் சொல்லவில்லை”

Image
113ஐ அந்தப் பக்கமிருந்தோ, இந்தப் பக்கத்திலிருந்தோ காட்டினாலும் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது எனவும், நாட்டின் யதார்த்தத்தை அனைவரும் புரிந்துகொண்டு ஒன்றுபட்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதியமைச்சரின் உரையின் பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த முன்னாள் பிரதமர், சாலை வரைபடத்தை முன்வைக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் கூறியதை தானும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். “..ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சென்றுள்ளார். சுட்டுக் கொலை செய்ய உத்தரவிட்டது யார் என்று இதுவரை கூறவில்லை. பி அறிக்கை தயாரிக்கப்பட்டது. பி அறிக்கை பின்னர் நீக்கப்பட்டது. துப்பாக்கிச்சூட்டுக்கான காரணத்தை விளக்கியிருக்க வேண்டும்.அதை சொல்லவில்லை. அனைத்து ஒழுக்கங்களும் மீறப்பட்டன..” from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2C3q9yi via Kalasam

பாப்பரசரின் அழைப்பின் பேரில் கர்தினால் வத்திகானுக்கு பயணம்!

Image
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான 60 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று வத்திக்கானுக்குச் சென்றுள்ளனர். குறித்த தூதுக்குழுவினர் இன்று(22) அதிகாலை வத்திக்கானுக்குச் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ளனர். இதனை அருட்தந்தை ஜூட் கிறிஷாந்த உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் இந்தக் குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/YQLGpEk via Kalasam

முதல் தடவையாக அதிகரித்த இலங்கையின் பணவீக்கம்

Image
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) கணக்கிட்டுள்ள மாதாந்திர பணவீக்க வீதங்களின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 21.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி, இலங்கையில் பெப்ரவரியில் 17.5% ஆக இருந்த பணவீக்க வீதம் மார்ச் மாதத்தில் 4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/e6hwvu3 via Kalasam