Posts

நிந்தவூரில் நடந்த கேவலமான அரசியல்! ரவூப் ஹக்கீமின் நடவடிக்கைக்கு விமர்சனம்

Image
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேச சபையில், பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் 01 ஆசனத்தோடு ஆட்சியமைக்க இருந்த நிலையில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சபையை கையகப்படுத்திக்கொள்ளும் நோக்கில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒரு உறுப்பினருக்கு தவிசாளர் ஆசை காட்டி, தம் வசப்படுத்தி, அந்த நபரை (அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்) தவிசாளராக்கிய கீழ்தர அரசியல் கலச்சாரம் ஒன்றை அரங்கேற்றிய சம்பவம் நிந்தவூர் பிரதேச சபையில் அரங்கேறியுள்ளது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள், இன்று (02) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி தலைமையில் இடம்பெற்றது. இத்தெரிவின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் அஸ்பர் தவிசாளராகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இர்பான் உப தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நிந்தவூர் பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது 06 உறுப்பினர்களைக் கொண்டிருந்த நிலையில், 04 உறுப்பினர்களை மாத்திரம் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறை!

Image
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை, பாஸ்போர்ட் சேவைகளுக்கான டோக்கன்களை வழங்குவதற்கான திருத்தப்பட்ட நடைமுறையை அறிவித்துள்ளது, இது ஜூலை 2, 2025 திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. புதிய முறையின்படி, ஒரு நாள் மற்றும் சாதாரண பாஸ்போர்ட் சேவைகளுக்கான டோக்கன்கள் (Token) பத்தரமுல்லையில் உள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை வழங்கப்படும். அவசர அல்லது முன்பதிவு செய்யப்பட்ட ஒரு நாள் சேவை நியமனங்களைக் கொண்ட விண்ணப்பதாரர்களும் இந்த நேரத்தில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். சேவை நாளில் காலை 6.00 மணிக்குப் பிறகு வரும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் டோக்கன்கள் கிடைக்கும் என்பதால், முந்தைய நாள் இரவு பொதுமக்கள் வர வேண்டாம் என்று திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. தரகர்கள் அல்லது இடைத்தரகர்களுக்கு பணம் செலுத்துவதைத் தவிர்க்கவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர், அனைத்து கொடுப்பனவுகளும் அதிகாரப்பூர்வ ஷ்ராஃப் (Shroff's )கவுண்டரில் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டுகள் நியமிக்கப்பட்ட வழங்கும் கவுண்டர்களில் இருந்து சேகரிக்கப்பட வேண்டும் ...

9 மாதங்களாக சிறையில் வாடும் சுஹைல்: நீதி கேட்டு புலம்பும் பெற்றோர்

Image
  பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைதுசெய்யப்பட்டு, 9 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஸுஹைலின் தந்தையை, சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு (Lawyers for Social Justice) நேற்று (28.06.2025) மாவனல்லையில் சந்தித்தது.  ஸுஹைல் PTA இன் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டது குறித்த முழு விவரங்களையும் இச்சந்திப்பின் போது சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். பெற்றுக்கொண்ட விவரங்களின் சுருக்கம் வருமாறு:  * 23.10.2024 -  மாவனல்லையைச் சேர்ந்த 20 வயதான ஸுஹைல், கொழும்பில் தனது வேலை நிமித்தம் தங்குவதற்காக ஒரு வாடகை அறையைப் பார்க்கச் சென்ற போது, தெஹிவளையில் உள்ள இஸ்ரேலிய Chabad House இன் அருகே வைத்து பகல் 2.30  - 3.00 மணியளவில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுகிறார்.  கைது செய்யப்படும் போது அவரிடம் தேசிய அடையாள அட்டை இருக்கவில்லை. ஆனால் உடனடியாக கைத்தொலைபேசியில் உள்ள தேசிய அடையாள அட்டையின் பிரதி பொலிஸாருக்கு  காண்பிக்கப்படுகிறது.  * 24.10.2024 - காலை கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் ஸுஹைல் ஆஜர்...

நாளை ரவூப் ஹக்கீமுடன் உத்தியோகபூர்வமாக இணைகின்றார் முஷாரப் !

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரசின், முன்னாள்  பாராளமன்ற உறுப்பினரும் தற்போது பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான SMM. முஷர்ரப் அவர்களும் அவர்களுடைய பொத்துவில் பிரதேச சபையின்  எழு (07) உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய முக்கியஸ்தர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் நாளை இணைவதாக அக்கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளர் சமால்டீன் தெரிவித்துள்ளார்.  சிறிலங்க முஸ்லீம் காங்கிரஸின்   தேசியத் தலைவர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் ( MP) அவர்களின் முன்னிலையில் நாளை (25)  காலை 9.30 மணியளவில் மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைத்துள்ள வாவா திருமண மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும் என அவர் அறிவித்துள்ளார்.  இந் நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர்கள், முன்னால் பாராளமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் அத்தோடு.அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தேர்தலில் போட்டியிட்ட , பட்டியல் வேட்பாளர்கள்,மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/LMlduQW...

இறக்காமம் பிரதித் தவிசாளர் ஆசிக் மு.காவிலிருந்து இடைநிறுத்தம்; கடிதம் அனுப்பிவைப்பு.!

Image
கட்சி முடிவுக்கு எதிராக இறக்காமம் பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் நசீர் முகம்மது ஆசிக்கிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கான கடிதம் கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் எம்.பி அவர்களினால் இன்று சனிக்கிழமை (28) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடைய கட்சி அங்கத்துவம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் செயலாளர் அறிவித்துள்ளார். இறக்காமம் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பதவி தொடர்பில் சுயேட்சைக் குழு உறுப்பினரான கே.எல். சமீம் அவர்களுடன் கட்சி ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டிற்கு மாறாக தானும் அப்பதவிக்குப் போட்டியிட்டு, கட்சித் தீர்மானத்தை நசீர் முகம்மது ஆசிக் மீறிச் செயற்பட்டிருந்தார் என்று முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் எம்.பி குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு ஆசிக் அவர்களுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டாலும், தனது பக்க நிலைப்பாட்டுடன் நீதிமன்றத்தை ஆசிக் நாடும் சந்தர்ப்பத்தில் அவரை உடனடியாக நீக்க முடியாது என்பதுடன், வழ...

SLMCயின் எம்பியாகின்றார் வாசித்- தவிசாளராக முஷாரப் சற்றுமுன் உடன்பாடு எட்டப்பட்டது

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக நாளைய தினம் (27) இடம்பெறவுள்ள தவிசாளர் தெரிவின் போது முஸ்லிம் காங்கிரஸின் 5 உறுப்பினர்களின் ஆதரவோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரியவாகவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் தவிசாளர் வாசித் தெரிவாகவுள்ளதாக சிலோன் முஸ்லிம் தளத்திற்கு தெரியவருகின்றது இன்று (26) ஸ்ரீலங்ககா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு முன்னிலையில், முஷாரப் மற்றும் வாசித்த ஆகியோருக்கு நல்லிணக்கம் செய்து வைக்கப்ப பின்னர் இத்தீர்மானத்தை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுக்கப்பட்டுள்ளதாக சிலோன் முஸ்லிம் தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பிப்பினர் முஷாரப் அவர்களை இணைத்துக்கொண்டதில் ஏற்பட்ட முரண்பாட்டால் பொத்துவில் முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் கொண்ட அதிருப்தியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் பெரும் சிரமத்திற்கு மத்தியில் இன்று தீர்த்து வைத்ததுடன் முஷாரப் -- வாசித் ஆகியோர் சமாதானத்திற்கு இணங்கிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.  நாளைய தவிசாளர் தெரிவில் வாச...

சற்றுமுன் தெரிவான முஸ்லிம் காங்கிரஸின் உபதவிசாளர் ஆசிக் கட்சியை விட்டு இடைநிறுத்தம் ! நிஸாம் காரியப்பர்

Image
இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளராக சற்றுமுன் தெரிவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் ஆஷிக்கை கட்சியை விட்டு இடைநிறுத்தியாக அக்கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் அறிவித்துள்ளனர்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக தெரிவு செய்யப்பட முஸ்மி தவிசாளராக தெரியவானதுடன், உப தவிசாளராக சுயேற்சை உறுப்பினர் சமீம்முக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், சமீம் உப தவிசாளர் பதவிக்கு பெயர் மொழியப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆசிக் அவர்களும் பெயரை முன்மொழிந்தால், அதிருப்தியடைந்த சமீம் வெளியேறினார் அதனைத் தொடர்ந்து ஆசிக் தவிசாளராக தெரிவாகியதால் கட்சியின் தீர்மானத்தை மீறியதால் அடிப்படையில் கட்சியை விட்டு வெளியேறியாத நிஸாம் காரியப்பர் அறிவித்துள்ளார். VIDEO:  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/dant0SL .html via Kalasam