Posts

Showing posts from May, 2025

மூதூர் தமிழ் கூட்டமைப்புக்கு : குச்சவெளி முஸ்லீம் காங்கிரசுக்கு !

Image
குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (27) திருகோணமலையின் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவருமான சண்முகம் குகதாசன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ். தௌபீக் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குச்சவெளி பிரதேச சபையில், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர். குச்சவெளி பிரதேச சபையில், அதற்கு அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும்...

சூரியன் கஃபதுல்லாஹ்வுக்கு உச்சம் கொடுக்கும் நாட்களில் சூரிய நிழலில் கிப்லாவை அமைத்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம்.

Image
- கொழும்பு பெரிய பள்ளி அறிவிப்பு  இன் ஷா அல்லாஹ் இம் மாதம் 27/05/2025 செவ்வாய்க்கிழமை மற்றும் 28/05/2025 புதன்கிழமை ஆகிய இரு தினங்களில் சூரியன் புனித கஃபதுல்லாஹ்வுக்கு உச்சம் கொடுக்கும் நாட்களாக  அமையப் பெறுகிறது. அந்த வகையில் இலங்கை நேரம் பகல் 2.48 மணிக்கு சூரியன் 27ஆம் திகதி   +89° 56' 25" என்ற பெருமானத்திலும், 28 ஆம் திகதிக்கு +89° 53' 53" என்ற பெருமானத்திலும் புனித கஃபதுல்லாஹ்வுக்கு உச்சம் கொடுக்கும்.  நம் நாட்டில் இக்குறிப்பிட்ட நேரத்தில் (பகல் 2.48 மணிக்கு) சூரியன் மேற்குப் பக்கமாக சாய்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு செங்குத்தான (90°) பொருளில் கிழக்குப் பக்கமாக விழும் நிழலை அடையாளப்படுத்தி அந் நிழலுக்கு எதிர்பக்கமாக ( மேற்குப் பக்கமாக) முன்னோக்கினால் அது கிப்லாவின் திசையாக அமையப்பெறும். எனவே காலநிலை சீராக இருந்தால் கிப்லாவின் திசையை இவ்விரு நாட்களில் துல்லியமாக  அடையாளப்படுத்தக்கூடிய சந்தர்ப்பத்தினை நழுவ விடாது நமது வீடுகள், தொழில் செய்யும் இடங்கள், பள்ளிவாசல்கள் போன்ற இபாதத் செய்யும் இடங்களில் கிப்லாவின் திசையை துல்லியமாக அடையாளப்படுத்துவது ஃபர்ழு கி...

விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு தெய்வாதீனமாக உயிர் தப்பிய பலாங்கொடை பள்ளிவாயல்கள் நஜீமுதீனின் திகில் அனுபவம்

Image
  35 வருடங்களுக்கு முன், 1990 ஜூன் மாதம் 11 ஆம் திகதி.. பொலிஸ் சார்ஜன்ட் ஆக இருந்த போது விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு தெய்வாதீனமாக உயிர் தப்பிய பலாங்கொடை பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின்  தலைவர்அல் ஹாஜ் நஜீமுதீனின் திகில் அனுபவம்  * தமிழ் சகோதரர் ஒருவர் உணவும் பாதுகாப்பும் தந்து உறங்க வைத்தார்.  * நெற்றியில் திருநீறு பூசி என்னை தமிழ் கிராமத்துக்கு அழைத்து சென்று பின் என்னை பள்ளிவாயலில் ஒப்படைத்தார்.  * இரத்தக் கறையுடன் காட்டில் பாய்ந்து விடியும் வரை புதருக்குள் மறைந்திருந்தேன்.  * ஜனாதிபதி ஆர். பிரேமதாச எங்களை சரணடையுமாறு அன்று எங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.  * கருணா எங்களை கொன்று விடுமாறு உத்தரவு வழங்கியிருந்தார்.  * நான் இறந்து விட்டதாக பொலிஸ் அறிவித்திருந்ததால் வீடு திரும்பிய என்னை வீட்டார் அச்சமடைந்து வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.  * பொலிஸ் சேவையில் இருந்த அநேகமான தமிழ் அதிகாரிகள் விடுதலைப் புலிகளால்  கொலை செய்யப்பட்டனர். 1990 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இருந்து கடத்திச் செல்லப...

பொத்துவில் அறுகம் குடாவில் பொது இடங்களில் நீச்சல் உடை அணிய தடை..??

Image
இலங்கையின் பிரபல கடலோர சுற்றுலா தலமான அறுகம் குடாவில் பொது இடங்களில் பிகினி (நீச்சல் உடை) அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர். “அறுகம் குடாவில் உள்ள உள்ளூர் சமூக மக்கள்” என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவால் வெளியிடப்பட்ட ஒரு பதிவைத் தொடர்ந்து வார இறுதியில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்தப் பதிவு, “உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்க” பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. “அறுகம் குடாவிற்கு வருக! உங்களை இங்கு சந்திப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் உங்கள் வருகையை உண்மையிலேயே மதிக்கிறோம். எங்கள் உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்க, பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு நாங்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம். எங்கள் மரபுகளுக்கான உங்கள் மரியாதை எங்கள் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது. உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும் அழகான அறுகம் குடாவில் உங்கள் நேரத்தை நீங்கள் ...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக மருதமுனை ஜுனைதீன்!!

Image
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு இன்று (26) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/aMA5j2k via Kalasam

மருதமுனை இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய தடை! இனி அவதானம்

Image
பாறுக் ஷிஹான் மருதமுனை பிரதேச மக்களுக்கான அறிவித்தல் எனும் தலைப்பில் மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையம் எனும் பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வாழும் மக்களுக்கான குறித்த அறிவித்தல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் அத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.அத்துடன் மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையம் அண்மையில் கூட  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மருதமுனையின் தற்போதைய நிலை - மாணவர்கள் நலன் - இளைஞர்களின் போக்கு, மருதமுனையின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மருதமுனை பிரதேச மக்களுக்கான அறிவித்தல் அன்புடையீர்  அஸ்ஸலாமு அலைக்கும் கடந்த காலங்களில் நமது ஊரின் செயற்பாடுகள் பள்ளிவாசல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாக இருந்ததனை தாங்கள் அறிவீர்கள். குடும்பப் பிரச்சினைகளும்இ மக்களுக்கிடையிலான பிணக்களும் குடும்பமட்டத்திலும்  பள்ளிவால்கள் மட்டத்திலும்...

ஞானசார தேரர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - முனீர் முளாபர்

Image
கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடக சந்திப்பொன்றைநடத்தி எனக்கு எதிராக தெரிவித்துள்ள பொய்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார். பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 20ஆம் திகதி கலகொட அத்தே ஞானசார தேரரினால் நடத்தப்பட்ட பொதுபல சேனா ஊடக சந்தி்ப்பின்போது முனீர் முளப்பர் ஆகிய என்னைப்பற்றி உண்மைக்கு புறம்பான அறிவிப்போன்றை மேற்கொண்டு ஊடகங்கள் ஊடாக அவதூறு பரப்பி இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியிடப்பட்ட அவமதிப்பு அறிக்கையின் பிரகாரம், நிட்டம்புவ திஹாரி  பிரதேசத்தில் அமைந்துள்ள தன்வீர் நிறுவனம், ஜமாத்-இ-இஸ்லாம் மற்றும் இஹ்வான் முஸ்லிம் ஆகிய அமைப்புகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.  அதேநேரம் கடவுளுக்காக மக்களைக் கொல்பவராகவோ அல்லது அதை ஆதரிப்பவராகவோ நான் ஒருபோதும் இருந்ததில்லை, மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் கடுமைய...

சஜித்தின் பதவியை நிராகரித்த இம்தியாஸ்! தொடரும் நெருக்கடி

Image
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை மீண்டும் பொறுப்பேற்க முன்னால அமைச்சர் இம்தியாஸ் பாகிர் மாக்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த பொது தேர்தலின் பின் குறிப்பாக முன்னாள் அமைச்சர் தேசியப்பட்டியல்  தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி விவகாரம் தொடர்பில் இவர் பதவி விலகி இருந்தார்.எனினும் இப்பதவியை வேறு எவருக்கும் வழங்காத கட்சி தற்போது அப்பதையே மீண்டும் பொறுப்பேற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது எனினும் இப்பதவியை அவர் பொறுப்பேற்க மறுப்பு தெரிவித்து உள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன இதேவேளை,   ஐக்கிய மக்கள் சக்தியின் பல தொகுதி அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.  உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்குப் பிறகு அந்த உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலை காரணமாக, அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.  அதன்படி, பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, ஹொரவ்பொத்தானை தொகுதி அமைப்பாளர் அனுர புத்திக, தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் சட்டத...

தென்னிலங்கையில் தெரிவான முதலாவது முஸ்லிம் பெண் நீதிவான்!!

Image
காலி, அவள் மனம் தளரவில்லை பொருத்தமான அரச உத்தியோகத்தில் அமர வேண்டும் என்ற ஆவல் மேலோங்கி இருந்தது அவ்வாறான தருணத்தில் தான் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் பதவிக்காக ஆட்சேர்ப்பு நடவடிக்கை நடைபெறுவதாக அறியக் கிடைத்தது.  ஜிப்ரியாவும் அதற்கான விண்ணப்பம் ஒன்றை அனுப்பி வைத்தார்.  அதற்கான பரீட்சையை திறம்பட செய்ததன் விளைவாக 2006 ஆம் ஆண்டிலே  கோட் முதலியார் என்ற பதவியிலே அவர் அமர்த்தப்பட்டார். அவரின் மகிழ்ச்சிக்கு அளவேயிருக்கவில்லை இந்த பதவி கிடைத்து ஒரு சில காலங்களில்   அவர்  யூனானி மருத்துவதுறைக்கு  தெரிவு செய்யப்படுகிறார்.  ஆனால் தான் மேல்படிப்பை மேற்கொண்டால் தனது சகோதரிகளின் படிப்புக்கான செலவுகளை ஈடுசெய்வதற்கான வசதி தாய் தந்தையரிடம்  போதாமை காரணமாக தான் வகித்து வந்த முதலியார் பதவியை கைவிடவில்லை. தொடந்து அந்த தொழிலில் ஈடுபட்டார்.  காலம் செல்ல செல்ல நீதி தேவதையின் நிழலில் நின்ற வண்ணம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரின் உள்ளத்தில் வலுவாக ஊன்றி நின்றது.  மூத்தவளுக்கே ஏற்ற பொறுப்பும் தாய் தந்தையரின் அரவணைப்பில் கிடைத்த அன்பும் அவரு...

SLMCயின் முதலமைச்சர் வேட்பாளராக அதாவுல்லாஹ்

Image
  நடைபெறப்போகும் மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா களமிறங்கவுள்ளதாக தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பீட உறுப்பினர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளனர். கடந்த வாரம் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பானது எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றியதானதெனவும் தெரிவித்தனர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச்சின்னத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாக அரசியல் பீட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் நம்பத் தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி...

மூடப்பட்டுள்ள மஹர பள்ளிவாசலை திறக்க, அனுர அரசிடம் நீதி கேட்டும் நிருவாகம்!

Image
120 வருடம் பழமைவாய்ந்த வரலாற்றைக் கொண்ட மஹரா ஜும்மா பள்ளிவாசல் ஒரு வருந்தத்தக்க நிலையில் காணப்படுவதாகவும், மீள திறக்க உதவுமாறும் பிரதியமைச்சர் முனீர் முளாபருக்கு பள்ளிவாயலின் நிருவாகத்தின் கடிதமொன்றை எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளாவது, 1903 ஆம் ஆண்டு, மஹரா சிறைச்சாலைகளில் சேவையாற்றிய மலாய் பாதுகாவலர்களினால் உருவாக்கப்பட்டு, வழங்கப்பட்ட மஹரா ஜும்மா பள்ளிவாசல், கடந்த 6 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. 2019 ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், எந்தவொரு நியாயமுள்ள காரணமும் இல்லாமல், மஹரா சிறைச்சாலை நிர்வாகத்தினால் இப்பள்ளிவாசல் மூடப்பட்டது. இது நாட்டின் அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை மத உரிமைகளை மீறுகிறது. ராகமா மற்றும் அதனைச் சுற்றியுள்ள முஸ்லிம் மக்கள் இன்று வரை தங்கள் வழிபாட்டு உரிமைகளை இழந்திருக்கின்றனர். மஹரா ஜும்மா பள்ளிவாசல் 02.03.1967 ஆம் திகதி இலங்கை வக்ஃப் சபையினால் பதிவு செய்யப்பட்டதுடன், அந்தக் காலத்திய சிறைச்சாலைகள் ஆணையாளர் அனுமதியுடன் செயற்பட்டது. பல ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையில், மலாய் சமூகத்தினரின் எண்ணிக்கையிலான க...

Ferial Ashraff: A Pioneer of Muslim Women’s Political Leadership

Image
 Ferial Ashraff: A Pioneer of Muslim Women’s Political Leadership Ferial Ashraff’s political journey is emblematic of resilience and strategic leadership in a context where Muslim women faced significant social and cultural barriers to political participation. Unlike many political widows who simply act as caretakers of their spouses’ legacies, Ashraff distinguished herself by actively shaping her own political identity and agenda. Her emergence challenged prevailing gender norms within both the broader Sri Lankan polity and the conservative segments of the Muslim community, signaling a gradual but important shift toward greater inclusivity. By successfully navigating the complex terrain of ethnic politics and coalition-building, she not only upheld the interests of the Muslim minority but also advocated for the socio-economic upliftment of plantation communities, which are often overlooked in national policy debates. Her ministerial tenure in housing and plantation infrastruc...

புத்தளம் பாயிஸின் மகளுக்கு பிரதேச சபை உறுப்பினர் பதவி!

Image
 #ஶ்ரீ_லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாநகர சபையின் கௌரவ உறுப்பினராகிறார் ஷதா பாயிஸ்… மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் அவர்களின் அன்புப் புதல்வி ஷதா பாயிஸ் அவர்கள் புத்தளம் மாநகர சபையின் உறுப்பினராக எமது கட்சியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் அவர்களையும் அன்னாரது குடும்பத்தையும்  கௌரவிக்கும் முகமாக இந்த பதவியை எமது கட்சி சார்பாக ஷதா பாயிஸுக்கு வழங்கி வைத்துள்ளோம். எனவே அதற்கான நியமனப் பத்திரம் இன்று ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும்,முன்னாள் நகர சபை உறுப்பினருமான ரணீஸ் பதூர்தீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.  கே.ஏ.பாயிஸ் மரணித்து இன்றுடன் 4 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவரது அன்புப் புதல்வி ஷதா பாயிஸ் அவர்கள் ஒரு மாநகர சபையின் உறுப்பினராக இன்றிலிருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். www.ceylonmuslim.com from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/EM9ovzx via Kalasam

ரிசாட் புஹாரியை அடுத்த NPP சிராஜ் மசூரும் தூக்கி வீசப்பட்டாரா?

Image
ருஸ்திக்காக குரல் கொடுத்த சிராஜ் மஸுர் ! அக்கரைப்பற்று மாநகரசபை தேர்தலில் வட்டாரத்தில் போட்டியிட்டவர்களில்  NPP கட்சி சார்பாக அதிக வாக்குகளை (622 வாக்குகள்) பெற்றவர் வேட்பாளர் சிராஜ் மசூர். அதிக வாக்குகளை பெற்ற சிராஜ் மசூர் போன்றோர் புறக்கணிக்கப்பட்டு குறைந்த வாக்குகளைப் பெற்று வட்டாரங்களில் படுதோல்வியடைந்த மக்கள் செல்வாக்கில்லாத வேட்பாளர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதால் சிராஜ் மசூரின் ஆதரவாளர்கள் பலர் அக்கரைப்பற்று NPPயின் தீர்மானங்களுக்கு எதிராக அதிருப்தியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிந்திய தகவல்களின்படி ருஸ்திக்காக குரல் கொடுத்ததனாலேயே சிராஜ் மஸுருக்கு ஆப்பு சொருகியுள்ளது NPP. என்கின்றனர் உண்மை விடயம் அறிந்தவர்கள். இவ்வாறே சம்மாந்துறையில் அதிக வாக்குகளை பெற்ற புகாரி ரிஷாட் ஏற்கனவே திட்டமிடப்படு புரக்கணிக்கப்பட்டுள்ளதால் அரசியல் செயற்பாட்டில் அதிருப்தியடைந்த அவர் அரசியல் செயற்பாடில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  Boomudeen  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/4KNAbrT via Kalasam

பாரம்பரிய முஸ்லீம் சமூகம், தீவிரவாத ஒடுக்குமுறை காரணமாக பாதிக்கப்பட்டு, எனது உதவியை கோரியுள்ளது - ஞானசாரர்

Image
ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொதுபலசேனாவின் ஞானசாரதேரர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவுவது குறித்து சமீபத்தில் தான் தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்தே மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளேன் என தெரிவித்துள்ள ஞானசார தேரர், நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் மதபதற்றம் ஆபத்தான விதத்தில் அதிகரித்துள்ளதை இது வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார். ஏறாவூரின் பாரம்பரிய முஸ்லீம் சமூகம் தீவிரவாத ஒடுக்குமுறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது,எனது உதவியை கோரியுள்ளது என தெரிவித்துள்ள ஞானசார தேரர்,அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மத்தியில் உள்ள தீவிரவாத சக்திகள் குறித்து தகவல்களை வழங்கியுள்ளதுடன் இவற்றை பகிரங்கப்படுத்துமாறு கோரியுள்ளனர் என தெரிவித்துள்ளார். லிபியா கடாபி குழு என்ற குழுவினர் வட்ஸ்அப் மூலம் அச்சுறுத்தும் செய்திகளை...