Posts

Showing posts from July, 2022

IMF கூட்டத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவு

Image
சர்வதேச நாணய நிதியத்தில் சீனா அங்கத்துவம் பெற்றுள்ளதால்,பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனத் தூதுவர் சி ஷெங்ஹாங் வலியுறுத்தியுள்ளார்.  பணிப்பாளர் சபை கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு சீனா வழங்கும் ஆதரவை பாராட்டிய பிரதமர், நீண்ட கால தீர்வாக, நேரடி தனியார் முதலீடுகள் மற்றும் விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கைத்தொழில் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/KPJzyle via Kalasam

யாழில் எரிபொருள் நிலையத்தில் புதியதாக மேற்கொள்ளப்படுகன்ற தொழில் முயற்சி!

Image
நாட்டில் தற்போது பொருளாதார சிக்கலை கடந்து அனைவரும் எரிபொருள் சிக்கலில் சிக்கி தவிக்கின்றோம். இந்நிலையில் வாகனத்திற்கு எரிபொருள் பெருவது என்பது மிகுந்த சிரமத்திற்குள்ளான விடயமாக பார்க்கப்படுகிறது. இதில் எரிபொருற் நிலையத்தில் நாள் கணக்காக காத்திருந்து எரிபொருள் பெற்றுவருவது மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கி வருவதும் இதனால் பல உயிரிழப்புகளும் நாட்டில் நிகழ்ந்து வருகின்றது. எரிபொருளை நாளை பெற வேண்டுமென்றால் இன்று இரவு செட்டிற்கு போய் இரவு முழுவதும் சாப்பாடு இல்லாமல் நிக்கவேண்டும். இந்த துயரத்தினை போக்க யாழில் புதிய தொழில் முயற்சியை சிலர் துவங்கியுள்ளன. அதாவது எரிபொருள் வரிசையில் முதல் நூறு எண்ணிக்கைக்குள் இடம் பிடித்துக் கொடுத்தால் 1000 ரூபா எனவும். நாள் முழுவதும் அந்த இடத்திலேயே தங்கி நின்று மோட்டார் சைக்கிளை பாதுகாத்து மறுநாள் காலை உரிமையாளரிடம் இடத்தையும் வாகனத்தையும் ஒப்படைத்தல் 1500 ரூபா கூலியாக வழங்கப்படுகிறது. இந்த முயற்சி யாழில் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து அனைவரும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/cdp19vH ...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இன்றுவரை அரசியலிலும், பாதுகாப்புத்துறை அதிகாரிகளாகவும் பணியாற்றுகின்றனர்

Image
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் இன்றுவரை அரசியலில் ஈடுபட்டும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளாக பணியாற்றியும் வருகின்றனர் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். முகத்த்துவாரம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் வருடாந்தப் பெருவிழாவில் பிரசங்கம் ஆற்றிய போதே கர்தினால் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் :- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மை மறைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நாட்டின் சக்திவாய்ந்த நபர்கள் அவர்களுக்குப் பின்னால் இருந்தனர். 2019 இல் மூன்று தேவாலயங்கள் மற்றும் ஒரு சில ஹோட்டல்களில் குண்டுகளை வீசியவர்கள் இன்னும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளாகவும் பணியாற்றுகிறார்கள். இதன் காரணமாக நீதிக்கான எங்கள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கத்தோலிக்கர்களாகிய நாம் நீதிக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த பலம...

ரத்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

Image
காலி ரத்கம கம்மெத்தே கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.  இன்று (31) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  காயமடைந்த ஏனைய மூவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சம்பவத்தில் 48 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/sK28JPC via Kalasam

பெற்றோல் வரும் திகதியை அறியச்சென்ற இளம்தாய் சடலமான சோகம்

Image
பண்டுலகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு மீண்டும் எப்போது பெற்றோல் வரும் என்பதை தெரிந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் விபத்தில் சிக்கி நேற்று (30) உயிரிழந்துள்ளார். எரிபொருள் நிரப்புவதற்காக வந்த டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இப்பெண் உயிரிழந்ததுடன் அவருடன் சென்ற தாயார் படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பி.டி.அனோமா ரணசிங்க என்ற 36 வயதுடைய பெண்ணே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/TcO6NAr via Kalasam

பாராளுமன்ற உறுப்பினர்களுகாக எரிபொருள் கொடுப்பனவு 2 லட்சமாக அதிகரிப்பு ..

Image
பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு சுமார் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதன்படி யாழ்ப்பாணம் போன்ற தூர பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எரிபொருள் கொடுப்பனவுக்காக சம்பளத்துடன் கிட்டத்தட்ட  ரூ. இரண்டு இலட்சம் வழங்கப்படவுள்ளது. ஏனைய பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவாக ஒரு இலட்சத்துக்கு  மேல் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.  எரிபொருள் பிரச்சனையால், கொழும்புக்கு வெளியில் உள்ள பல எம்.பி.க்ளின்  பாராளுமன்ற வருகை மிக குறைவாக இருப்பதால் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Kmaf8YD via Kalasam

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மீண்டும் கொவிட்!

Image
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அலுவல பணிக்கு திரும்பிய மூன்றே நாட்களில் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/fthF3D4 via Kalasam

முஸ்லிம் காங்கிரசுக்கு மூன்று அமைச்சுப்பதவிகள்?

Image
  நாசிக் எம்.எச்.டீ முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணையும் பட்சத்தில் அதற்கு மூன்று அமைச்சுப்பதவிகளை ஒதுக்க ஜனாதிபதி விருப்பம் கொண்டுள்ளார். அதன் பிரகாரம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மிகப்பலமான அமைச்சுப்பதவியொன்றும், அதற்கீடான இரண்டு இராஜாங்க அமைச்சுப்பதவிகளை எச்.எம்.ஹரீஸ் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோருக்கு வழங்கவும் ஜனாதிபதி விருப்பம் கொண்டுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைந்தால் மாத்திரமே சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஒரு அர்த்தம் கிடைக்குமென்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.   அதன் காரணமாக நிமல் லான்சா ஜனாதிபதியின் சார்பில் இந்த முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. சர்வ கட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை இணைப்பதில் காட்டப்படும் அக்கறை,  ஆர்வம், தீவிரம் என்பன ஐக்கிய மக்கள் சக்தி விடயத்தில் கூட காட்டப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/JlqGwcI via Kalasam

ரஞ்சனுக்கு பூரண சுதந்திரம் கிடைக்கும்

Image
மனிதாபிமானம் கொண்ட, மக்கள் மனதை வென்ற அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விரைவில் பூரண சுதந்திரம் கிடைக்கும் என தானும் அனைத்து அரசியல்வாதிகளும் மற்றும் சகல இலங்கையர்களும் எதிர்பார்த்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை இன்று (30) பார்வையிட சென்ற பின்னரே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். நீண்ட நாட்கள் செல்வதற்கு முன் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் என தான் எதிர்பார்பார்ப்பதாகவும், அந்நாள் வரும் வரை காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவர் ஓர் உண்மையான மனிதாபிமானி என்பதோடு ஒரு மக்கள் சார் கலைஞராகவும்  மகத்தான பணிகளை நிறைவேற்றியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை நேரில் சந்தித்த எதிர்கட்சித் தலைவர், ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீண்ட நேரம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். மனிதாபிமான மிக்க அரசியல்வாதிவாதியும், மக்கள் சார் கலைஞராகவும் தொடர்ந்து மக்கள்...

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஒன்றிணையுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

Image
   சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஒன்றிணையுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதியினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக அராஜகங்களில் இருந்து படிப்படியாக மீள்வதற்கு அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதியினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைமையான பொருளாதார சீர்திருத்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சவால்களை  வெற்றிகொள்வதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

எரிபொருள் நெருக்கடி: கடிதங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடும்

Image
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியால் கடிதங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் நெருக்கடி நிலையால் தபால் நிலைய ஊழியர்கள் முறையாக கடமைக்கு சமுகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ZuErBYl via Kalasam

QR முறையில் இதுவரை பதிவு செய்யாதவர்களுக்கான அறிவித்தல்

Image
எரிபொருள் விநியோக அனுமதிப் பத்திர QR முறையில் வாகன chassis இலக்கத்தின் ஊடாக பதிவு செய்ய முடியாதவர்கள் வாகன வருமான அனுமதி பத்திர இலக்கத்தின் ஊடாக பதிவு செய்துக் கொள்ளுமாறு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.  ட்விட்டர் செய்தியில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறு பதிவு செய்துக் கொள்ளுமாறு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/7BIh5op via Kalasam

ஜனாதிபதி தலதாமாளிகைக்கு விஜயம்

Image
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்துள்ளதோடு மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து வழிபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/r7NsIX8 via Kalasam

முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு ஜனாதிபதியின் முக்கிய பதவி..

Image
முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரப் பகிர்வு நிர்வாகத்தின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/GA84iTg via Kalasam

ஏற்றுமதி வருமானம் 20% இனால் அதிகரிப்பு

Image
2022 ஜூன் மாதத்தில், சரக்கு ஏற்றுமதி மூலம் நாட்டின் வருமானம் 20% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் ஏற்றுமதி வருமானம் 1,208.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இது குறித்து, ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ஆடை, ரப்பர், தேங்காய் தொடர்பான பொருட்கள், உணவு மற்றும் பானங்கள், கடல் உணவுகள் ஆகியவற்றின் ஏற்றுமதி வருவாய் அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/tZTbac7 via Kalasam

பண்டாரநாயக்க சிலை தொடர்பில் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு

Image
பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் எல்லைக்குள் யாரும் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. கோட்டை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, பண்டாரநாயக்க சிலைக்கு 50 மீற்றர் தூரத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழையக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார். ஆனால் போராட்டக்குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து இந்த உத்தரவை நீக்குமாறு கோரியிருந்தனர். அந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் இன்று அழைக்கப்பட்ட போதே, ஆட்சேபனைகளை நீதிமன்றத்தில் எழுத்து மூலம் முன்வைக்குமாறு கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு நீதவான் உத்தரவிட்டார். இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி குறித்த ஆட்சேபனைகளை முன்வைக்குமாறும், அன்றைய தினம் வழக்கை மீண்டும் அழைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANK...

கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவனின் சடலம் மீட்பு

Image
கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் கடந்த 26 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் 3 மாணவர்கள் பெரியதம்பிரான் ஆலய உற்சவ இறுதி நாளான அன்று தீர்த்தம் உற்சவத்தில் நீராடச் சென்ற போது கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.  அவர்களில் இரு மாணவர்கள் உயிர்தப்பிய நிலையில் கரை சேர்ந்ததுடன் மற்றுமொரு மாணவன் கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டிருந்தான்.  இவ்வாறு காணாமல் போன பெரிய நீலாவணை 1 பகுதியை சேர்ந்த 16 வயதுடைய இராசநாயகம் சனுஜன் என்ற மாணவனின் சடலம் புதன்கிழமை (27) மாலை கரை ஒதுங்கியுள்ளது.  பின்னர் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மரண விசாரணைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.  சுமார் 16 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவர்களே இவ்வாறு இவ்வனர்த்தத்தில் சிக்கிக்கொண்டதுடன் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டிருந்ததாக...

நான்கு பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் (26 வயது பெண்) ஒருவர் உயிரிழப்பு.

Image
  பலாங்கொடை தாமஹன பிரதேசத்தில் தோட்டம் ஒன்றில் மண்வெட்டிகளால் வேலை செய்து கொண்டிருந்த நான்கு பெண்கள் மீது மின்னல் தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று (28) இடம்பெற்றுள்ளது. தோட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த இவர்களில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கடுமையாகப் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் ஏனைய மூன்று பெண்களும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகி ன்றனர். மரணமடைந்தவர் இதே பிரதேசத்தில் நுகஹேனவத்த பகுதியில் வசித்து வந்த 26 வயதையுடைய இரண்டு குழந்தைகளின் தாய் எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஏ.ஏ.எம்.பாயிஸ் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/M01uiwX via Kalasam

எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான சகோதரி ஷமீம் பானு இக்பால் வபாத்.

Image
தன்னம்பிக்கை கொண்ட ஒரு சகோதரி பானு இக்பால் காலமானார்.... இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தன் அனுபவப் பகிர்வுகளை நூலாகத் தொகுத்து விழிப்பூட்டல் செய்த சகோதரி பானு இக்பால் தொடக்கத்தில் நலம் பெற்றபோதும் பிறகு மிகுதியாக பாதிக்கப்பட்டிருந்தார். தன் இறுதி நாட்களில் தன் தாய் வீடான (பட்டாளத்தார் இல்லம்) புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் கணவர் இக்பால், மகன் பாசில், தாயார், தம்பி ஜியாவுல் ஹக் மற்றும் தம்பி மனைவியுடன் வசித்து வந்தார். இன்று பி.ப 2.00 மணிக்கு கரம்பக்குடி பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. குறுகிய காலத்தில் எழுத்துத்துறையில் பெரிய சாதனைகளை நிகழ்த்தியதுடன் சமூக செயற்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சகோதரி ஷமீம் பானு இக்பால் என்றென்றும்  நம் மனங்களில் நிறைந்திருப்பார்.  அன்னாரது மறுமை வாழ்வு ஈடேற்றமுள்ளதாக அமைவதற்கு வல்லவன் அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்! இக்பால் - 96565031575 தம்பி ஜியா - 9384409904 from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Yi9B0qW via Kalasam

இஸ்மத் மௌலவி கைது!

Image
பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/qZzas5P via Kalasam

கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் பெத்தும் கெர்னர் கைது.

Image
கடந்த ஜூலை 13ஆம் தேதி நாடாளுமன்றம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட சமூக வலைதள ஆர்வலர் பெத்தும் கெர்னர் கைது செய்யப்பட்டார். பத்தும் கெர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் (CCD) இன்று கைது செய்யப்பட்டார். ஆர்ப்பாட்டத்தின் போது பொல்துவ சந்திக்கு அருகில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதியில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக வலியுறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/iq2zoPS via Kalasam

டானிஸ் அலி கைது செய்யப்பட்டது ஏன் ? பொலிஸாரின் விளக்கம் இதோ ..

Image
  ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்து அதன் சேவைகளுக்கு தங்கல் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, நேற்றையதினம் (26) வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் கைதான சந்தேகநபர் தொடர்பில், பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. தானிஸ் அலி எனும் குறித்த சந்தேகநபர், நேற்றையதினம் (26) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் செல்ல முயன்ற போது விமானத்தில் வைத்து CID யினால் கைது செய்யப்பட்டிருந்தார். சந்தேகநபர் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை... கடந்த ஜூலை 13ஆம் திகதி கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடல் பிரதேசங்களில் போராட்டங்களுடன் இணைந்தவாறு வன்முறைகளை மேற்கொண்ட போராட்டக்காரர்கள் ஒரு சிலர், இலங்கை ரூபவாஹினி கூட்டு தாபனத்திற்குள் நுழைந்து அதன் நேரடி ஒளிபரப்பில் கலந்து கொண்டு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அறிக்கைகளை விடுத்து, ரூபவாஹினியின் ஒளிபரப்பு நடவடிக்கைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு இடைநிறுத்துவதற்கும் காரணமான சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர், வெளிநாட்டொன்றுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்த வேளையில் நேற்று (26) பிற்பகல் கட்டுநாயக்க பிரிவு அதிகாரிகளால் கைது செ...

எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி மகிந்த ராஜபக்ச தலைமையில் போட்டியிடும் .

Image
  ராஜபக்சக்களை அரசியலில் இருந்து அகற்ற எவரேனும் தயாரானால் அது வெறும் கனவாகவே போகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அழிக்க எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும், எதிர்காலத்தில் பொதுஜன பெரமுன வலுவாக இருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் எனவும் இந்திக அனுருத்த எம்.பி மேலும் தெரிவித்துள்ளார் . ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வலுப்படுத்தும் பணிகள் ஏற்கனவே வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், அதற்காக கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இந்திக அனுருத்த தெரிவித்தார். தமது கட்சி குறித்த மக்களின் கருத்தை எதிர்வரும் தேர்தலில் காணமுடியும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் தமது கட்சியை நிராகரித்தால் கட்சி என்ற ரீதியில் அதனை ஏற்றுக்கொள்ள தயார் எனவும் தெரிவித்தார். மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்சியின் தலைவராக தொடர்ந்து செயற்படுவார் எனவும் எதிர்வரும் தேர்தலில் அவரது தலைமையில் கட்சி போட்டியிடும் எனவும் ...

ஜனாதிபதியின் இல்லத்தில் பணத்தினை எண்ணியவர் கைது!

Image
  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு 14, மல் மாவத்தையினைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், குறித்த சந்தேக நபர் கொழும்பு ஹுசேனியா வீதியிலுள்ள கடையொன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பொதுமக்கள் அரச கட்டடத்தை முற்றுகையிட்டதன் பின்னர் காணப்பட்ட பணத்தை எண்ணிக் கொண்டிருந்த ஒருவரே இவர் என்பதும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை சிலர் எண்ணும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதன் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/qsBcL6g ...

ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

Image
ஈராக் – பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அங்கு இருந்திருக்கவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ZETraiS via Kalasam

நீதிமன்றத்தால் பிரதிவாதியாக்கப்பட்ட கோட்டாபய!

Image
  நாட்டையும் மக்களையும் திவால் நிலைக்கு இட்டுச் சென்றவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்தல் அனுப்ப இலங்கையின் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனுக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தனிப்பட்ட பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே பிரியந்த ஜயவர்தன விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று அழைக்கப்பட்டபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் பிரதிவாதிகளான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீடிக்க உத்தரவிட்டது. அத்துடன் இந்த மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குற்றச்சாட்டில் இருந...

ரஞ்சனுக்கு விடுதலை

Image
  ரஞ்சன ராமநாயக்கவிற்கு விடுதலை வழங்குவது தொடர்பான அனைத்து ஆவணங்களும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.. ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்குத் தேவையான ஆவணங்களின் தொகுப்பிற்கு சட்டமா அதிபரின் மேலும் ஒரு பரிந்துரை தேவை என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/EcPlt7S via Kalasam

4 மில்லியன் பேர் பதிவு

Image
நேற்றிரவு 9 மணி வரை தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெற 4 மில்லியன் பேர் பதிவு செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.  299 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் 34 ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் QR அமைப்புகள் மூலம் எரிபொருளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  அதன்படி நேற்றைய தினம் QR முறைமைகள் ஊடாக 92,845 பரிவர்த்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Uh4zDde via Kalasam

தங்கத்தின் விலை சரிவு

Image
இலங்கையில் தங்கத்தின் விலை கணிசமான அளவில் குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 22 கரட் தங்கத்தின் விலை வரலாறு காணாத விலையாக ரூ.200,000 கடந்த காலத்தில் அதிகரித்திருந்தது. தற்போது ரூ.166,000 மாக குறைந்துள்ளது. இதேவேளை, 24 கரட் தங்கத்தின் விலையும் ரூ.180,500 மாக குறைந்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Ximh7Rk via Kalasam

திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

Image
பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக திரிபோஷா உற்பத்தி கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீளவும் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியை வழங்க உலக உணவுத் திட்டம் அண்மையில் இணக்கம் தெரிவித்திருந்தது. உலக உணவுத் திட்ட அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே தற்போது திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/1DjzC6S via Kalasam

ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்கின்றது தொல்பொருள் திணைக்களம் !

Image
தொல்பொருள் திணைக்களத்தின் குழுவொன்று இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்துள்ளது. அவர்கள் ஜனாதிபதி மாளிகையில் கலாசார மற்றும் வரலாற்றுப் பொருட்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அழிவுகளை மதிப்பீடு செய்யவுள்ளனர். பொலிஸாரின் கோரிக்கையின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் தொல்பொருள் திணைக்களம் தொல்பொருட்கள் மற்றும் கலாச்சார சொத்துக்களை வைத்திருக்கவில்லை. இருப்பினும் பொருட்களின் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டு அதில் இல்லாத பொருட்களின் விபரங்கள் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/wag4qdY via Kalasam

மத்திய வங்கி கையை விரித்தது. ஆகஸ்ட மாதத்திற்கு தேவையான டொலர்களை பெறுவதில் சவால்கள் உள்ளன..

Image
  ஆகஸ்ட் மாதத்திற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதில் பலத்த சவால் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜேசேகர குறிப்பிட்டார். மாதம் ஒன்றுக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய  500 - 600 மில்லியன் டொலர்கள் தேவை.200 மில்லியன் டொலர்களை மத்திய வங்கி வழங்குகிறது. மீதியை நாம் வங்கி மற்றும் ஏற்றுமதியாளர்களிடமே பெறவேண்டும். அது மிகக்கடினமானது. அதனால் நாம் எமது இறக்குமதியை 200 மில்லியன் டொலர்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.  அடுத்த மாதத்திற்கு தேவையான டொலர்களை வழங்குவதில் சிரமம் உள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது. ஆகஸ்ட மாதத்திற்கு தேவையான டொலர்களை பெறுவதில் சவால்கள் உள்ளன என அவர் குறிப்பிட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/TWI5jl6 via Kalasam

டான் பிரசாத்தின் தம்பி இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை..!

Image
டன் பிரியசாத்தின் சகோதரர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகுடவத்த மேம்பாலத்திற்கு அருகில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். நேற்று (25) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இக்கொலையை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீதொட்டமுல்ல வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவர் எனவும் அவர் டான் பிரியசாத்தின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலையாளியின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என குடும்பத்தினர் தெரிவித்த போதும் பெற்றோல் வரிசையின் கைகலப்பாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/LBQlIuU via Kalasam

கோட்டா விரைவில் நாடு திரும்புவார் – அரசாங்கம் அதிரடி.

Image
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதுங்கி தலைமறைவாகவில்லை. சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் பந்துல மேற்கண்டவாறு தெரிவித்தார். ” முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டில் தலைமறைவாகவில்லை. அவர் சட்டப்பூர்வமாகவே வெளிநாடு சென்றுள்ளார். அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவார் . அவர் நாட்டுக்கு வருகை தரும் திகதி, விவரம் குறித்த தகவல்கள் தனக்கு தெரியாது எனவும் அமைச்சர் பந்துல இதன்போது கூறினார். அதேவேளை, புதிய அரசின் இடைக்கால வரவு – செலவுத்திட்டம் அடுத்த மாதத்துக்குள் முன்வைக்கப்படும் எனவும், சர்வக்கட்சி அரசமைப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்பின் பிரகாரமே இடம்பெறும் எனவும் அமைச்சர் பந்துல சுட்டிக்காட்டினார் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/LNR0XeJ via Kalasam

முச்சக்கரவண்டி சாரதிகள் எரிபொருள் பெற பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும்!

Image
முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரியுள்ளார். டுவிட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில், எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே எரிபொருள் பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விவசாய உபகரணங்கள், மின்பிறப்பாக்கிகள் மற்றும் ஏனைய உபகரணங்களை பயன்படுத்துபவர்கள் அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்ய முடியும். தங்களது வாராந்த எரிபொருள் தேவை தொடர்பான தகவல்களுடன் இவ்வாறு பதிவு செய்து ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். செஸி எனப்படும் அடிச்சட்ட இலக்கம்மூலம் QR முறைமையை பதிவு செய்ய முடியாத வாகன பயனர்கள், வெள்ளிக்கிழமை முதல் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி பதிவு செய்ய முடியும் என வலுசக்தி அம...

முகக் கவசம் அணிவது கட்டாயம் ; வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.

Image
இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவியுள்ள நிலையில், முகக் கவசம் அணிவது தொடர்பான விதிமுறைகளை சுகாதார அமைச்சு திருத்தியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr. பொதுக்கூட்டங்களின் போதும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அசேல குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும் பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய கொவிட்-19 நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கையில் முகமூடி அணிவது தொடர்பான விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/UWRwmg1 via Kalasam

"அன்று வந்த கனவு... நான் ஹிஜாப் அணியக் காரணம் இதுதான் - மனம் திறந்த சனா கான்

Image
- மு.பூபாலன் - "எனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதி என்னிடம் இல்லை. அந்த நாள்கள் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தன. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன்." - இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் நடித்தவர் சனா கான். இவர் நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞராகத் திரையுலகில் பணியாற்றி வருபவர். தமிழில் இவர் நடிகர் சிம்புவின் 'சிலம்பாட்டம்', 'பயணம்' ஆகிய படங்களில் நடிகையாகவும் 'ஈ', 'அயோக்கியா' போன்ற படங்களின் பாடல் காட்சிகளில் சிறப்புத் தோற்றத்திலும் பணியாற்றியிருக்கிறார். அதேபோல, கடந்த 2012-ல் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிவரை வந்தார். சமீபகாலமாக சனா கான் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி என எதிலும் பணியாற்றுவதில்லை. கடந்த 2020-ல் முஃப்தி அனஸ் சயத் என்பவரைத் திருமணம் செய்து திருமண வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பதிவு செய்த சனா, தனது வாழ்வின் கடுமையாக ந...

ராஜபக்ஷக்களை போல ரணிலையும் மக்கள் துரத்துவார்கள் – அநுரகுமார

Image
ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ரணில் வீடு செல்ல வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய கோரிக்கை என தெரிவித்த அவர், எனவே மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்றார். காலி முகத்திடலில் மக்களே போராடினர். இன்றும் மக்கள் தான் போராடி வருகின்றனர். ஆனால் அமைதியாக போராடும் மக்களை போராட்டக்காரர்கள் என தெரிவித்து, அவர்களை தாக்குவதற்கு இராணுவத்தினருக்கு புதிய ஜனாதிபதி உத்தரவிடுகின்றமை கீழ்த்தரமான செயற்பாடு என்றார். இதனால் அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் கோபம் அதிகரிக்கும் என்று கூறினால் அது தவறாகாது. எனவே புதிய ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அவ்வாறு மக்களின் கோரிக்கையை அவர் ஏற்காவிடின் ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி ராஜபக்ஷக்களை போலவே ரணிலையும் மக்கள் துரத்துவார்கள் என்றார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/twkobru via Kalasam

ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி

Image
இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திபொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜனாதிபதி தேர்வில் வெற்றி பெற்றமைக்காக ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/MmDz2aw via Kalasam

ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்ட சுமார் நாற்பது வாகனங்களை காணவில்லை

Image
ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்ட சுமார் நாற்பது வாகனங்கள் காணாமல் போயுள்ளன.  அந்த அலுவலகத்தில் 749 வாகனங்கள் இருந்த நிலையில் அந்த  வாகனங்களிலேயே 40 ஐ காணவில்லை.  அந்த வாகனங்கள் என்ன ஆனது என்பது குறித்து இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.  17 கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், 06 சிங்கள் கெப் வண்டிகள், 2 டபுள்  வண்டிகள் மற்றும் மூன்று வகையான வேறு வாகனங்கள் காணாமல் போயுள்ளன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/f2O7dmJ via Kalasam

காலிமுகத்திட ஆர்ப்பட்டக்காரர்களை அகற்றியமை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம்

Image
காலிமுகத்திட ஆர்ப்பட்டக்காரர்களை அந்த இடங்களில் இருந்து அகற்றியமை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நாளை (27) நடைபெற உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இன்று விவாதத்தை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், எரிபொருள் பிரச்சினை காரணமாக இன்று நாடாளுமன்றம் கூடி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க முடியாமையினால் நாளை வரையில் பிற்போடப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ENp1B5X via Kalasam

எ‌ரிபொரு‌ள் பெற்றுக் கொள்ளும் QR முறை தொடர்பாக வெளியான அறிவிப்பு!!

Image
தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இன்று (25) எரிபொருள் விநியோக அட்டை முறை அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையை இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், இன்றும் இது ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த இன்னும் சில நாட்கள் ஆகும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர் தசுன் ஹகொட மேலும் கருத்து தெரிவிக்கையில். "இந்த முன்னோடித் திட்டத்தை நாடு முழுவதும் பல கட்டங்களாக விரிவுபடுத்துவதே எங்கள் நோக்கம். இந்த திட்டம் தேர்வு செய்யப்பட்ட சில இடங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளில் இத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தினோம். மேலும், 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னோடி...

4708 வாகனங்கள் QR குறியீட்டின் கீழ் வெற்றிகரமாக எரிபொருளைப் பெற்றன -அமைச்சர் காஞ்சன

Image
  -சி.எல்.சிசில்- தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் நேற்று (23) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ள அமைச்சர், QR குறியீட்டின் கீழ் 20 இடங்களில் எரிபொருள் அனுமதிப்பத்திரம் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். 4708 வாகனங்கள் வெற்றிகரமாக எரிபொருளைப் பெற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிடுகிறார். இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் 25 இடங்களில் எரிபொருள் சோதனைகளை மேற்கொள்ளவிருந்த போதிலும், ஓர்டர்கள் வழங்கப்படாமை, தாமதம் மற்றும் விநியோகக் குறைபாடுகள் காரணமாக 05 இடங்களைப் பரிசோதிக்க முடியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த 05 இடங்களும் அடுத்த இரண்டு நாட்களில் செய்யப்படும். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ODIlb3j via Kalasam

வாரத்துக்கு இரண்டு தடவை மாத்திரமே எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள்!

Image
வாகனங்களின் பதிவு இலக்கங்களுக்கு அமைய வாரத்தில் ஏழு நாட்களுக்கு ஒதுக்கப்பட்டாலும், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வழங்கப்படுவதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு 13,200 லீற்றர் எரிபொருள் மாத்திரமே வெளியிடுவதாக அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித குறிப்பிடுகின்றார். தேவைக்கேற்ப போதிய எரிபொருள் தொகையை வழங்காமல் வரிசையை நிறுத்த முடியாது என்றும் அவர் கூறினார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்) from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/AzxXovj via Kalasam

பாதுகாப்புப் படையினரின் சீருடைகளுக்கு நிகரான சீருடை அணிந்திருந்த வெளி தரப்பினரால் தாக்குதல்?

Image
ஜனாதிபதி அலுவலகத்தில் தங்கியிருந்த ஆர்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினரின் சீருடைகளுக்கு நிகரான சீருடை அணிந்திருந்த வெளி தரப்பினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார். ஆர்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேறவுள்ளோம் என்று அறிவித்தல் விடுத்திருந்த போதிலும் பாதுகாப்புப் படையினரின் இவ்வாறான தாக்குதலின் பின்னர் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்கள் மூலம் அரச பயங்கரவாதத்தைக் கொண்டு வந்து மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்க அரசாங்கம் தயாராகி வருவது தெளிவாக தெரிகிறது என அவர் கூறுகிறார்.   from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/tHoCSKa via Kalasam

எ‌ரிபொரு‌ள் வரிசையை மூன்றே மாதங்களில் நீக்க முடியும்! -ரத்தன தேரர்

Image
நாட்டில் நிலவும் நெருக்கடியை உடனடியாக சமாளிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே தேரர் இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை மூன்று மாதங்களுக்குள் நீக்க முடியும் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார். நாடு உணவு நெருக்கடியை எதிர்கொள்வதை தடுக்க முடியும் என தேரர் மேலும் தெரிவித்தார். சில தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்தார். போர்த்துகீசியம் மற்றும் ஆங்கிலேய பாணியிலான அரசியற் கொள்கையைப் பின்பற்றிய கடைசி அரசியல்வாதி ஜனாதிபதி விக்கிரமசிங்க என்றும் அவருக்குப் பின்னர் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் என்றும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/NRzvWsB via Kalasam

ஜனாதிபதி அலுவலகம் நாளை முதல் இயங்கும்

Image
மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் நாளை முதல் முழுமையாக இயங்கும் என உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். போராட்டக்காரர்களால் ஆக்கிரமிப்பின் போது சேதமடைந்த கதவுகள் மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை, ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கான சாட்சியங்களை சேகரிப்பதற்காக கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் விசேட குற்றப் பிரிவு மற்றும் கைரேகை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஜூலை 9 அன்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டனர். “கோட்டை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது, மேலும் குற்றவியல் அதிகாரிகள் (SOCO) மற்றும் சிறப்பு கைரேகை புலனாய்வு அதிகாரிகள் மூலம் தடயவியல் சான்றுகள் ஜனாதிபதி செயலகத்தில் சேகரிக்கப்படும்” என்றுபொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/y7JXE...

உலக நாடுகளுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி!

Image
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் சிலரை சந்தித்துள்ளார்.  ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தியது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது விரிவாக விளக்கியுள்ளார்.  அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் சட்டமா அதிபர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.  ஜனாதிபதி செயலகத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற பாதுகாப்புப் படையினர் செயற்பட்ட விதம் குறித்து கவலையடைவதாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இதன்போது தெரிவித்துள்ளார்.  அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க கேபிடல் கட்டிடத்தை எதிர்ப்பாளர்களிடம் இருந்து விடுவிக்க அந...

நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு வாக்களித்தவர்கள் 10 கோடி ரூபா முதல் 15 கோடி ரூபா வரை பெற்றனர்...!!!!!

Image
  நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் வெற்றி பெற ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபா முதல் 15 கோடி ரூபாவை வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முட்டாள்களை நன்கு பயன்படுத்திக்கொள்வார் எனவும் அவர் கூறியுள்ளார். இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பான விடயத்தில் நாங்கள் கட்சித்தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். ஆனால், ரணில் விக்ரமசிங்க தரப்பினர் தனித்தனியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை வழங்குவது, எரிந்து போன வீட்டுக்கு பதிலாக வீடு, அவற்றுக்கு இழப்பீடு வழங்குவது, கார்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம், இரண்டு ஆண்டு காப்பீடு போன்றவற்றை அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசினர். பெருந்தொகையான பணம் பரிமாறப்பட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த எ...

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படலாம்: நளின் பெர்னாண்டோ

Image
எதிர்வரும் நாட்களில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது. திறந்த கணக்கின் ஊடாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/iwKFLxS via Kalasam